எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் எம்ஜியார்.
எம்ஜிஆர் ஆசையாக வளர்த்த நாய் ஒரு முக்கிய திரைப்படத்தில் நடித்துள்ளது தெரியுமா?
எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் எம்ஜியார்.
அங்கேயே பொமரேனியன் ஆண், பெண் நாய்களையும் வளர்த்தார்.
ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது.
அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார்.
அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்:
’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை.
இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை”
என்று கண் கலங்கிச் சொன்னார் செம்மல்.
ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து
“மிஸ்டர் எம்.ஜி.ஆர்.
நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை.
மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும்.
ஸ்மோகிங் இல்லை.
காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை.
என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா?
அது அறவே கிடையாது.நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார்.
அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.
எம்.ஜி.ஆரின் சுபாவம் மற்றும் அவருடைய பண்பட்ட குணநலன்கள் அவரை ஒரு சிறந்த மனிதராக நம் மனதைக் கவர்கிறது........
