"நான் கேட்பது யாசகம் இல்லை.. உரிமை”... பருத்திவீரன் விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீர் அறிக்கை
பருத்திவீரன்
கடந்த சில நாட்களாக பருத்திவீரன்
படத்தின் போது இயக்குனர் அமீருக்கும்
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட
பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம்
நடந்து வருகிறது. தயாரிப்பாளர்
ஞானவேல் ராஜா "பருத்தி வீரன் பட
தயாரிப்பின் போது அமீர் பொய்க்
கணக்கு காட்டி பணத்தை திருடினார்"
எனக் கூறினார்.
அதையடுத்து அந்த படத்தில்
பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா, சேரன் மற்றும் கரு பழனியப்பன்
உள்ளிட்ட பலர் இயக்குனர் ஆதரவாக
அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால்
ஞானவேல் ராஜா
சமூகவலைதளங்களில் கடுமையாக
எதிர்மறை விமர்சனங்களையும்
கேலிகளையும் சந்தித்து வருகிறார்.
மேலும் சூர்யா, சிவகுமார் மற்றும்
கார்த்தி ஆகியோருக்கும் கண்டனங்கள்
எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இப்போது அமீர் இந்த விவகாரம் சம்மந்தமாக ஒரு நீண்ட
அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்
"வணக்கம். நான் இயக்குனர் அமீர்..
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்
சங்கத்தின் முன்னாள் செயலாளர்,
தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன்
அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல்..
சென்னையைச் சூழ்ந்துள்ள மழை
வெள்ளத்தால் பொதுமக்கள்
சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி,
முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில்,
அதனுடைய தாக்கத்தில் இருந்து
மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு
ஈடு செய்ய முடியாமலும், மீண்டும்
தங்களது வாழ்க்கையச் சரி செய்யப்
போராடிக் கொண்டிருக்கும் இந்த
சூழ்நிலையில்.. எனது "பருத்திவீரன்"
தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை
வெளியிடுவதில் நான் மிகவும் மனம்
வருந்துகிறேன்.
ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு "பருத்திவீரன் திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுடைய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் நான் கடந்து விட்டால், நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். எனவே, திரு.சிவசக்தி
பாண்டியனாகிய உங்களுக்கும்,
"பருத்திவீரன்" படம் சம்பந்தமான
பிரச்னையில் எனக்கு ஆதரவு
அளித்தவர்களுக்கும், ஊடகத்
துறையினருக்கும் உண்மை நிலையைத்
தெரிவிக்க மட்டுமே இந்தக் கடிதம்!
இதில், வேறு எந்த உள்நோக்கமும்
இல்லை. சமீபத்தில், ஒரு காட்சி ஊடகத்தில், "பருத்திவீரன்" திரைப்படம் தொடர்பாக தாங்கள் பேசியிருந்த இரண்டு நேர்காணல் பகுதிகளை இன்றைக்கு நான் பார்த்தேன். "பருத்திவீரன்"
திரைப்பட வெளியீடு தொடர்பான
பிரச்னையில் தாங்கள்
தலைமையேற்றிருந்தீர்கள் என்ற
உண்மையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு
தாங்களே பொதுவெளியில்
ஒப்புக்கொண்டதை நான் மனதார
வரவேற்கிறேன். மேலும், அந்த
நேர்காணலில் என் மீதும், என்
தொழிலின் மீதும் நீங்கள்
வைத்திருக்கும் அன்பிற்கும்,
நம்பிக்கைக்கும், பாராட்டுதலுக்கும் நான்
உளமார நன்றி கூறுகிறேன்.
சக திரையுலகினர் அனைவரையும்
அன்போடு அரவணைக்கும் தங்களது
பாங்கு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
எனவே தான், தங்களது நேர்காணல்
முற்றிலும் "எல்லோரும் நல்லவரே."
என்கிற பாணியில் அமைந்திருந்தது
என்பதை உணர்கிறேன். தங்களின்
நேர்காணலில் தாங்கள் பேசியிருந்த
விசயங்களில் உள்ள முரண்பாடுகளை அல்லது தாங்கள் சொல்ல மறந்த உண்மைகளை தங்களுக்கு நினைவு
படுத்துகிறேன்.
நிறைய விசயங்களை தாங்கள்
சொல்லியிருந்தாலும், சில விசயங்களை
தாங்கள் மறந்திருப்பீர்கள் என்ற
நம்பிக்கையோடு இந்தக் கடிதத்தை
உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
திரைப்படங்களில் விவகாரம் இருக்கும்
பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு
வந்தால், சுமூகமாக பேச்சுவார்த்தை
நடத்தி தீர்த்து வைக்கப்படும் என்று சங்க
நடவடிக்கைகளைப் பற்றிக்
குறிப்பிட்டிருந்தீர்கள்.
அந்த வகையில், தமிழ்த்திரைப்படத்
தயாரிப்பாளர் சங்கத்தின்
அங்கீகாரத்தைப் பெற்ற "TEAMWORK
PRODUCTION HOUSE" என்ற என்னுடைய நிறுவனத்தின் சார்பில் சென்சார் செய்யப்பட்ட பருத்திவீரன்" திரைப்படத்தை இன்னொருவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை தங்களுக்கு உருவானதா? அல்லது உருவாக்கப்பட்டதா.? என்பதை தாங்கள் அந்த நேர்காணலில் தெளிவாக விளக்கவில்லை.
, "TEAMWORK PRODUCTION HOUSE"
நிறுவனத்தின் பெயரில் தணிக்கை
செய்யப்பட்ட பருத்திவீரன்"
திரைப்படத்தை "அரசியல் அழுத்தம்"
காரணமாகவே திரு.ஞானவேல்
அவர்களுக்கு தாங்கள் மாற்றிக் கொடுக்கக்கூடிய சூழல் தங்களுக்கு உருவானது என்பதை அன்றைய காலகட்டத்தில் என்னிடம் எடுத்துரைத்தீர்கள். தாங்கள் சொல்வது உண்மையா. பொய்யா.! என்பதை அறிய முடியாத சூழலே அன்றைக்கு எனக்கு இருந்தது. இருந்த போதும், வேறுவழியின்றி சங்க நிர்வாகிகள்
சொன்னதை உண்மையென்று நம்பியே,
எனது "பருத்திவீரன்" திரைப்படத்தை
நான் வேறொரு நிறுவனத்துக்கு உரிமை
மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தேன்.
பிறிதொரு முறை திரைப்பட
வெளியீட்டுக்குப் பின்னர், அன்றைய
முதல்வர் அவர்களை, அவரது
இல்லத்திலேயே சந்தித்து நடந்த
விபரங்களை நான் அவரிடம் எடுத்துச்
சொன்னபோது, "தனக்கும் இந்த
நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை."
என்று அவர் கூறிய பின்பு தான் நான்
முழுவதுமாக திட்டமிட்டு
ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தேன்
என்பதை இப்போது தங்களுக்கு
தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், "பருத்திவீரன் திரைப்படம்
தொடர்பாக அமீர் நீதிமன்றத்தை
நாடியிருப்பது தேவையற்றது.. ஒரே
குடும்பமாக இருக்க வேண்டிய நாம்,
தயாரிப்பாளர் சங்கத்திலேயே பேசித்
தீர்த்திருக்கலாம்." என்றும் அந்த
நேர்காணலில் தாங்கள் கூறியிருப்பது
எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.
